மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப்பாதை அறிமுகம்; களுவாஞ்சிக்குடியில் இருந்து புதிய திட்டம் ஆரம்பம்.!!!
இலங்கையின் முக்கிய சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதற்காக தனிப்பட்ட போக்குவரத்து பாதை (Special Lane) அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் களுவாஞ்சிக்குடி நகரிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பின்னர் தேவைக்கேற்ப நாட்டின் ஏனைய முக்கிய சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஆண்டுதோறும் பதிவாகும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவையாக இருப்பதால், அவற்றைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புதிய தனிப்பாதைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பு மேம்படுவதுடன், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.