உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு ஜூலை 6 வரை ஒத்திவைப்பு.!!!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
அதேவேளை, பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றில் ஆஜராகினார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த ரிட் மனு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்துடன் இந்த வழக்கு தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.