ஆரையம்பதியில் லொறி மோதி விபத்து: துவிச்சக்கரவண்டி பயணி உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோரமான விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆரையம்பதி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரின் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கரவண்டி பயணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ஆரையம்பதி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய செல்லன் சின்னகுட்டி என அழைக்கப்படும் நபர் எனவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



