மட்டக்களப்பில் அரச பேருந்து–மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்.!!!
மட்டக்களப்பு – கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அரச பேருந்தும், அதே திசையில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




