ஈரான் மீதான புதிய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்; உடன்படிக்கைக்கு அவகாசம் வழங்கியதாக டிரம்ப் அறிவிப்பு.!!!
ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த புதிய தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ‘டிரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீரிணையை உடனடியாக முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்குமான உடன்படிக்கையை எட்டுவதற்காக ஈரானும், பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக தெரிவித்துள்ளார்.
அந்தக் கோரிக்கையை கருத்தில் கொண்டு, உலகின் எதிர்கால நலனையும், வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, விரைவில் உடன்படிக்கை எட்டப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தாக்குதலை தற்காலிகமாக ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளதாக டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.