உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260419-WA0042
குடி வெறியும், போதை பழக்கமும் – குடும்பங்களை நாசமாக்கும் சமூகப் பேரழிவு.!!!
Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???

Share :

நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு: 396 சந்தேகநபர்கள் கைது – ஆயிரக்கணக்கானோர் பரிசோதனை.!!!

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (20) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது மொத்தமாக 396 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 25,683 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 191 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 91 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக மேலும் 3,332 பேர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 772041

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time