ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு.!!!
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுகள் நாளை (18) முதல் வழங்கப்படவுள்ளதுடன், தகுதி பெற்ற பயனாளிகள் தங்களது ‘அஸ்வெசும’ வங்கி கணக்குகள் ஊடாக குறித்த தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொடுப்பனவுகள் தடையின்றி உரிய பயனாளிகளுக்கு சென்றடையும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.