இடி தாக்கம் – தென்னை மரம் தீயில் சாம்பல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
புத்தளம் கடையாகுளம் பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்று திங்கட்கிழமை (13) இரவு இடி தாக்கியதன் காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீண்டகால வரட்சி நிலவி வந்த நிலையில், திங்கட்கிழமை முதல் காலநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மாலை முதல் அந்தப் பகுதியில் இடி மற்றும் மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே புத்தளம் கடையாகுளம் பகுதியில் இருந்த தென்னை மரம் ஒன்றில் இடி தாக்கியதன் விளைவாக அது தீப்பற்றி எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

