மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து: கோழி ஏற்றி வந்த வாகனம் முற்றாக சேதம்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா பிரதான வீதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் கோழி ஏற்றிவந்த லொறியொன்று பாரியளவில் சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலையில் குருநாகல் இருந்து கோழிகளை ஏற்றுக்கொண்டு கல்முனை பக்கம் பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக வாகனம் தாழங்குடா பகுதியில் வைத்து அதே திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நொக்கிச் சேன்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை அக்கரைப்பற்று டிப்போவிற்குச் சொந்தமான சொந்தமான பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் கோழி ஏற்றிவந்த வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

