உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

April 18, 2026

Hot News

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

தெற்குக் கடற்பரப்பில் அதிரடி நடவடிக்கை: 161 கிலோ ஹெராயின் உடன் பல நாள் படகு பறிமுதல் – நான்கு பேர் கைது.!!!

-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-

இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின்போது, 161 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருள் தொகையுடன் ஒரு உள்ளூர் பல நாள் மீன்பிடி படகும் நான்கு சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘முழு நாடும் ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படை பிற சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலை ஒடுக்க தொடர்ச்சியான கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த வெற்றிகரமான நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு வெள்ளிக்கிழமை இன்று (17) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட பரிசோதனையில், அந்தக் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பைகளில் 161 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் இந்த பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் உரையாற்றிய பாதுகாப்புப் பிரதி அமைச்சர், போதைப்பொருள் கடத்தல் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலாக இருந்து வருவதாகவும், இதனை ஒடுக்க முப்படைகள் மற்றும் காவல்துறை இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் கடற்படையால் ரூ. 75,000 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் ரூ. 50,000 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இதுவரை 14 பல நாள் மீன்பிடி படகுகளும் 127 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சமூகத்திற்கு மீண்டும் செல்லாமல் முழுமையாக அழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இறுதியாக, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஊடகவியலாளர்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொறுப்பான செய்தியறிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட 161 கிலோவுக்கும் அதிகமான ஹெராயினும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 764811

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time