காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆணின் சடலம் மீட்பு; மேலதிக விசாரணைகள் தீவிரம்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் பகுதியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய திருமணமாகாத ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் விசாரணைகளைர மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
குறித்த சடலத்தின் அருகே தூக்கு கயிறு காணப்பட்டதுடன் சடலத்தின் கழுத்தில் குறித்த கயிற்றின் ஒரு பகுதி காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டூள்ளனர்.


