அர்ச்சுனா எம்.பி. அதிரடி அறிவிப்பு: “இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு விடை.!!!”
தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தாம் தற்போது நாடாளுமன்றத்தில் தனது கடைசி நாட்களை கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்” என்றார்.
மேலும், தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஓசல ஹேரத் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மூலம் சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும் முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில், அதன் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.