இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி.; விசாரணையின் பின் வெளியேறினார்.!!!
• 2013, 2014ஆம் ஆண்டுகளில் தனிப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பு தொடர்பில் விசாரணை.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (13) ஆஜராகி விசாரணைகளுக்கு உட்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தனது தனிப்பட்ட ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் தாம் அழைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பண வைப்பு தொடர்பில் ஆணைக்குழுவினர் தம்மிடம் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து தாம் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
