சிறுவர்களை இணையவழித் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க தேசிய வேலைத்திட்டம்.!!!
நாட்டில் சிறுவர்கள் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் இணையவழித் துன்புறுத்தல்களிலிருந்து (Online Harassment) அவர்களைப் பாதுகாப்பதற்கான பரந்தளவிலான தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தில், இணையவழி குற்றச்செயல்களை கண்காணிக்கும் நவீன முறைமைகள், ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறியும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு மற்றும் கல்விசார் தீர்வுகள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையவழி துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களை விரைவாக மீட்டு, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்கும் செயற்பாட்டு வழிமுறைகளும் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெறவுள்ளன.
சிறுவர்களுக்கான பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இந்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




