இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்.!!!
இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
மேலும், முதலீட்டுச் சபையின் புதிய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களால் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த புதிய நியமனங்கள் மூலம் நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்று, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் புதிய வேகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




