நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்.!!!
நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் திருமதி என்.ஆர். அனீஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜே.எம்.சி.ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நியமனங்களுக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
நிதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

