பொதுப் போக்குவரத்தில் புதிய மாற்றம்; 104 மெட்ரோ பேருந்துகள் விரைவில் இலங்கைக்கு.!!!
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான பயண அனுபவத்தை வழங்கும் மெட்ரோ (METRO) பேருந்து சேவை விரைவில் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
அதன்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட 104 புதிய மெட்ரோ பேருந்துகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்துகள் இலங்கைக்கு அனுப்புவதற்காக சீனாவின் Foton நிறுவனத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவை நாட்டின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் வகையில் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு அதிக வசதிகள் கிடைப்பதுடன், பொதுப் போக்குவரத்து சேவையின் தரமும் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.




