பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சத்தத்திற்கு இனி இடமில்லை; பொலிஸார் அதிரடி அறிவிப்பு.!!!
மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி தொடர்ந்தும் அதிக ஒலியுடன் ஒலி உபகரணங்களை இயக்கினால், சம்பந்தப்பட்ட ஒலி உபகரணங்களை பொலிஸார் பொறுப்பேற்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.