ஒன்றரை வயது குழந்தை 50,000 ரூபாய்க்கு விற்பனை – தாய் கைது.!!!
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை வெறும் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தாய் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கிய நபர் ஆகிய இருவரையும் தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் இந்த மனித விற்பனை சம்பவம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட குழந்தை தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வறுமை காரணமாக இருந்தாலும், ஒரு உயிரை – அதுவும் சொந்தக் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.