மட்டக்களப்பில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திக்கோடை சுவரணையடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.