பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து: நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு.!!!
நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணை இன்று (17) இடம்பெற்றபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.