உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்.!!!

இலங்கை தபால் திணைக்களத்தில் நிலவி வரும் மனிதவளப் பற்றாக்குறைக்கு தீர்வாக, நீண்டகாலமாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்ற விசேட நிகழ்வில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

ஊடகத்துறை மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்ய ஆரியரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் தபால் திணைக்களத்தின் பிரதி தபால் அதிபர்கள், நிறைவேற்று அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனங்களைப் பெற்றுக்கொண்ட 192 அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக சேவையாற்றி வந்த தற்காலிக உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை, தபால் சேவையின் செயற்பாட்டு வலுவை மேம்படுத்துவதோடு, நாட்டின் அஞ்சல் சேவையை மேலும் திறம்பட முன்னெடுக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 891236

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time