உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 22, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

6 வாகனங்களுடன் மோதிய தனியார் பேருந்து: பெண் ஒருவர் பலி; சாரதி கைது – 12 பேர் காயம்.!!!

கேகாலை மாவட்டத்தின் மொலகொட – மங்களகம பகுதியில் இன்று (22) நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்குச் சொந்தமான வாகனங்களும், பயிற்சித் தேர்வுக்காக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் மீது வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மொத்தம் ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் தனியார் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 900435

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time