வெல்லம்பிட்டியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதி உயிரிழப்பு.!!!
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து, இன்று காலை சுமார் 5.30 மணியளவில் வெல்லம்பிட்டி அம்பகஹ சந்தி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து சாரதிக்கு பயணத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் விளைவாக பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.