சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கச் சென்ற விசேட அதிரடிப்படை சார்ஜன்ட்; நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!!
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் இன்று (13) திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கையில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூதூர் – தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில், சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க உள்ளிட்ட STF வீரர்கள் மஹாவலி கங்கையில் இறங்கி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, எதிர்பாராத விதமாக நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இன்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.