கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் திடீர் தீ விபத்து – தீ கட்டுப்பாட்டுக்குள்.!!!
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் இன்று (18) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்களின் துரித செயற்பாடுகளின் காரணமாக தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




