சுரேஷ் சலே வாய் வழி உணவை மட்டுமே தவிர்த்துள்ளார்; மருத்துவ ஊட்டச்சத்துக்களை நிராகரிக்கவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மருத்துவ விஞ்ஞான முறைகளின் ஊடாக உடலுக்குத் தேவையான திரவ ஆகாரங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதை சுரேஷ் சலே நிராகரிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய மருத்துவ முறையிலான ஊட்டச்சத்துக்கள் இன்றி எவராலும் இவ்வளவு காலம் பட்டினியுடன் உயிர்வாழ முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், சுரேஷ் சலே முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கை பயனற்ற முயற்சியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் அவருக்கு தேவையான சிகிச்சைகளும் ஊட்டச்சத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.