பம்பலப்பிட்டியில் பரபரப்பு: முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து, ரயில் முன் பாய முயன்ற நபர் மீட்பு.!!!
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் தனது முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து சேதப்படுத்தியதுடன், பின்னர் ருஹுணு குமாரி ரயிலின் பாதையில் சென்று உயிருக்கு ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் உடனடியாக தலையிட்டு குறித்த நபரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.