உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட-மாவிலங்கத்துறை வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த: 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா; 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் – மூவர் கைது.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை (10) இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று அதிகாலை ஆறு மணி வரை இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது ஆரையம்பதியில் இருவர் மற்றும் மாவிலங்க துறையை சேர்ந்த ஒருவருமாக இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

14 லட்சம் மில்லி லீற்றர் கோடா 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு கோடா பரல்கள், கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கலன்களும் மீட்கப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806010

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time