உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

கடலில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் சடலங்களாக மீட்பு.!!!

ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்றபோது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று (31) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரகரமான சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் 12, 17 மற்றும் 18 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் ஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நண்பர்கள் குழுவாக களமெட்டிய கடற்கரைக்குச் சென்ற மாணவர்கள் கடலில் நீராடியபோது, திடீரென ஏற்பட்ட கடும் அலை காரணமாக மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, பிரதேச கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை முதல் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை மூவரின் சடலங்களும் கடற்கரையோரப் பகுதிகளில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் ஹங்கம பிரதேசத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929439

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time