உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

மகாவலி கங்கையில் துயரம்: நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் மாயம்.!!!

–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –

சேருநுவர பகுதியில் உள்ள சோமாவதி வனப்பகுதியை ஊடறுத்து பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக காணாமல் போனவர்களின் உடல்களை கண்டுபிடிக்கும் நோக்கில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 760968

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time