மட்டக்களப்பு பகுதியில் துயர விபத்து: ஜீப் மோதியதில் முதியவர் ஸ்தலத்தில் பலி.!!!
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலை சுமார் 7 மணியளவில் தாண்டியடி பிரதான வீதியில் பருத்திச்சேனை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மீது ஜீப் வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர், புது மண்டபத்தடி தாண்டியடி கிராமத்தைச் சேர்ந்த மார்ட்டின் கிஷ்ணபால (யோகராஜா) (வயது 62) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



