இலங்கை கடற்படை தளபதியுடன் துருக்கி தூதுவர் சந்திப்பு; கடல்சார் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்.!!!
இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குத் (Semih Lütfü Turgut), இன்று (06) கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இதன்போது, 27ஆவது கடற்படை தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோவுக்கு துருக்கி தூதுவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சந்திப்பின் நிறைவில், நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.



