உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

நீதிமன்ற ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில்: இரு சந்தேகநபர்கள் கைது.!!!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்த போது வழக்கு தொடர்பான ஆவணம் கிண்ணியாவில் உள்ள சந்தேக நபரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆவணத்தை திருடுவதற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டு ஊழியர்களால் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து மேலும் விசாரணை நடத்துமாறு நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்குத் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871499

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time