மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் உடலம் மீட்பு.!!!
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 5.00 மணியளவில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாவியில் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், அது ஓர் ஆணின் சடலம் என உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதுவரை அவர் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.