பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை: பெண் கைது.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன் காலனி பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (30) இரவு போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், சோதனையின் போது 72 பியர் டின்கள் மற்றும் 25 கால் போத்தல் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.