ஆற்றில் குதித்த குடும்பப்பெண்; காப்பாற்றிய இளைஞர்கள்.!!!
ஓட்டமாவடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த குடும்பப்பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றது.
தகவலின்படி, முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண், தொலைபேசியில் உரையாட வேண்டுமெனக் கூறி வாகனத்தை ஓட்டமாவடி பாலம் அருகே நிறுத்துமாறு சாரதியிடம் கேட்டுள்ளார். சாரதி வாகனத்தை நிறுத்தியவுடன், பெண் திடீரென ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த இரு இளைஞர்கள், ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தோணியை உடனடியாக எடுத்துச் சென்று, தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
உயிருடன் மீட்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



