இலங்கை அன்னாசிப்பழங்களுக்கு பாகிஸ்தானில் புதிய சந்தை வாய்ப்பு.!!!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாடு ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏற்றுமதி முயற்சி இலங்கையின் பழ ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதுடன், நாட்டின் விவசாய மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.