மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று; கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!!
கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தற்போதைய வானிலை மற்றும் கடல் நிலைமைகளை கருத்திற்கொண்டு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.