தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவில்; 3,398 பட்டதாரிகளுக்கு மூன்று நாட்களில் பட்டங்கள்.!!!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (25) ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையேற்று பட்டமளிப்பு நிகழ்வுகளை முன்னெடுத்தார். விழாவிற்கான நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டிருந்தார்.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 3,398 பட்டதாரிகளுக்கு 9 அமர்வுகள் ஊடாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
முதலாம் நாளில் நடைபெற்ற முதல் அமர்வில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
எதிர்வரும் இரண்டு நாட்களிலும் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நிறைவுபெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.



