மும்பையில் கட்டடங்கள் இடிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.!!!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
மும்பையின் மான்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகர் குடியிருப்புப் பகுதியில் நேற்று (05) ஏற்பட்ட இந்த விபத்தில், 2 முதல் 3 கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கட்டட இடிவுக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



