மட்டக்களப்பு வாவியில் மட்டி உற்பத்தி அதிகரிப்பு; மட்டி பிடியில் மீனவர்களுக்கு அதிக வருமானம்.!!!
(ஜே.கே)
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மட்டி உற்பத்தி அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி உண்ணுகின்ற மட்டி பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அதிக இலாபமீட்டி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 கிலோ மட்டி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், மட்டியின் ஓடுகள் சுண்ணாம்பாகவும், நீறாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன.
இன்றைய நாட்களில் மட்டக்களப்பு வாவியில் மீன் உற்பத்தி குறைவடைந்து நிலையில் மட்டி பிடிக்கும் தொழில்மூலம் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.




