உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி: மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்.!!!
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று (18) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம்” என்ற கோஷத்தை முன்வைத்து, தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும், தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து உண்மைகளும் வெளிக்கொணரப்பட வேண்டும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.





