அமெரிக்க தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; உலகுக்கு சீனா கடும் எச்சரிக்கை.!!!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் உலகையும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் மீண்டும் ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளதாக சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான துணை நிரந்தர பிரதிநிதி சன் லெய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய அவர், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தி, புதிய மோதல்கள் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கில் புதிய மோதல்களையும் குழப்பங்களையும் உருவாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்துவது தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான முன்னுரிமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச அமைதியையும் பிராந்திய நிலைத்தன்மையையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.