சிம்பாப்வேயில் படகு கவிழ்ந்ததில் 44 பேர் பரிதாப பலி.!!!
சிம்பாப்வேயில் பிரசித்தி பெற்ற கரிபா ஏரியில் பயணித்த பயணிகள் படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகில் ஏற்றிச் சென்றதே விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மீட்புப் படையினர் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் சிம்பாப்வேயில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




