ஈரான் இராணுவ பலத்தை இருமடங்காக வலுப்படுத்த தீர்மானம்: கமேனி அதிரடி அறிவிப்பு.!!!
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) நாட்டின் இராணுவ திறன்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருமடங்காக அதிகரிக்கும் திட்டம் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, ஈரானின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை வலுப்படுத்துவது அவசியமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நவீன ஆயுதங்கள், ஏவுகணை தொழில்நுட்பம், கடற்படை மற்றும் வான்படை திறன்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ துறைகளில் விரிவான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாட்டின் பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்துவதோடு, எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஈரான் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது.