ஈரான் கடும் எச்சரிக்கை: தரைவழி ஊடுருவும் படைகள் முற்றிலும் அழிக்கப்படும்.!!!
ஈரானின் இராணுவம், தரைவழி ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுமானால் அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா, எந்தவொரு தரைவழி ஊடுருவலுக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்குமாறு இராணுவத் தளபதி தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வெளிநாட்டு படைகள் தரைவழியாக ஈரான் நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு மேற்கொண்டால், ஊடுருவும் அனைத்து படைகளையும் முற்றிலும் அழிக்க ஈரானிய இராணுவம் முழுமையான தயார்நிலையில் இருப்பதாக கூறினார்.
இதன் மூலம், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் காக்க ஈரானிய ஆயுதப்படைகள் உறுதியாக செயல்படத் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
