குவைத் விமான நிலைய ட்ரோன் தாக்குதல்: 5 பங்களாதேஷ் நாட்டவர்கள் காயம்.!!!
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐந்து பங்களாதேஷ் நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள பங்களாதேஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஃபர்வானியா மருத்துவமனை மற்றும் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை குவைத்திற்கான பங்களாதேஷ் தூதர் சையத் தாரிக் ஹுசைன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காயமடைந்தவர்களில் இருவர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றொருவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்திருந்த இரு நபர்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்ற பின்னர் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தொடர்பாக தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பங்களாதேஷ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.



