அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாத்தில் ஆரம்பம்: உயர் மட்ட குழுக்கள் பங்கேற்பு.!!!
பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய மோதல்களின் பின்னணியில், பாகிஸ்தான் நடுநிலை வகித்து ஏற்படுத்திய இரண்டு வார போர்நிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள் இன்று (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளன.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), இந்த பேச்சுவார்த்தைகளில் ஈரான் பங்கேற்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நீடித்த அமைதி தீர்வை காணும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்ததாவது, துணை அதிபர் JD வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கொஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோரும் அமெரிக்கக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்று இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


